இந்தியா
தமிழ்நாட்டில் 3.2 சதவீத பள்ளிகளில் மூன்று மொழிகளில் பாடம்.. மத்திய அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் 3.2 சதவீத பள்ளிகளில் மூன்று மொழிகளில் பாடம்.. மத்திய அமைச்சர் தகவல்

Published On 2025-03-25 09:08 IST   |   Update On 2025-03-25 09:08:00 IST
  • கல்வித்துறை வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
  • 24,80,45,828 பேருக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் 14 லட்சம் பள்ளிகளில் சுமார் 61.6 சதவீத பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் 28.3 சதவீதம் பள்ளிகளில் இரண்டு மொழிகளும், 10.1 சதவீதம் பள்ளிகளில் ஒற்றை மொழி கற்பிக்கப்பட்டு வருவது மத்திய கல்வித்துறை வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 3.2 சதவீத பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி வெளியிட்ட தகவல்களின் படி, "1471891 இந்திய பள்ளிகளில் 61.6 சதவீதம் பள்ளிகளில் 74.7 சதவீத மாணவர்கள் அதாவது 248045828 பேருக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன."

"மொத்தமாக உள்ள இந்திய பள்ளிகளில் 28.3 சதவீதம் பள்ளிகளில் 16.8 சதவீதம் மாணவர்களுக்கு இரண்டு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் 10.1 சதவீதம் பள்ளிகளில் ஒற்றை மொழி மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் அருணாசல பிரதேசத்தில் 0.3 சதவீத பள்ளிகளில் மட்டுமே மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. நாகாலாந்தில் 2.5 சதவீதமும், தமிழ்நாட்டில் 3.2 சதவீதம் பள்ளிகளிலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே மூன்று மொழிகளில் கற்பிக்கும் முதல் மாநிலமாக குஜராத் உள்ளது. குஜராத்தில் 97.6 சதவீத பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன என்று மத்திய கல்வித்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

Tags:    

Similar News