இந்தியா

ஒரே நாளில் சீரடியில் ரூ.6.25 கோடி வசூல்

Published On 2024-07-25 06:13 GMT   |   Update On 2024-07-25 06:13 GMT
  • குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம்
  • 205 சாய்பாபா பக்தர்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்றைய நாளில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் பணம் உள்ளிட்டவற்றை அளித்தனர்.

குரு பூர்ணிமா நாளில் ரூ.6.25 கோடி உண்டியல் வசூலானது. மேலும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.

இது தவிர கடந்த 3 நாட்களில் 205 சாய்பாபா பக்தர்கள் ரத்ததானம் செய்துள்ளனர்.

Tags:    

Similar News