இந்தியா

1500 கிலோ எடையுள்ள மீன் சிக்கியது

Published On 2024-07-29 05:15 GMT   |   Update On 2024-07-29 05:16 GMT
  • மீனவர்கள் கிரேன் உதவியுடன் மீனை கரைக்கு கொண்டு வந்தனர்.
  • மீனவர்கள் சென்னை வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினம் அடுத்த சில்காலண்டி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது மீனவர்கள் வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியது.

இதனை கண்ட மீனவர்கள் வலையில் சிக்கிய மீனை கரைக்கு இழுத்து வந்தனர். கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது சுமார் 1500 கிலோ எடையுள்ள தேக்கு மீன் சிக்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மீனவர்கள் கிரேன் உதவியுடன் மீனை கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து மீனவர்கள் சென்னை வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சென்னை வியாபாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீனை வாங்கி லாரியில் ஏற்றி சென்னைக்கு கொண்டு வந்தனர்.

Tags:    

Similar News