இந்தியா (National)

வயநாட்டில் பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த வாலிபர்

Published On 2024-09-22 04:42 GMT   |   Update On 2024-09-22 04:42 GMT
  • குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.
  • இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள பள்ளித்தாழம் பகுதியில் வசிப்பவர் அமர் பதுர் சவுத் (வயது 45). நேபாளத்தை சேர்ந்த இவர், தனது குடும்பத்தினருடன் புலம் பெயர்ந்து கேரளாவில் வசித்து வந்தார்.

இவரது மகன் ரோஷன் சவுத் (20). இவரது மனைவி பார்வதி (21). இவருக்கு குறை பிரசவத்தில் 7-வது மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை திடீரென மாயமானது.

இந்த நிலையில் தனது குழந்தையை கணவர் மற்றும் அவரது பெற்றோர் தான் கொன்று புதைத்து விட்டனர் என்று போலீசில் பார்வதி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், தான் கர்ப்பத்தில் கணவர் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியடையவில்லை.

இதனால் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினர். இதற்காக சில மருந்துகளையும் கொடுத்தனர். இதன் காரணமாகவே எனக்கு குறைபிரசவம் ஏற்பட்டது. அதன்பிறகும் அவர்கள் கோபம் குறையாமல் குழந்தையை கொன்று விட்டனர் என குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணையில் இறங்கினர். அமர் பதுர் சவுத், அவரது மனைவி மஞ்சு, மகன் ரோஷன் சவுத் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று, புதைத்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பார்வதியிடம் விசாரணை நடத்தியபோது அவர், ரோஷணுடன் திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News