இந்தியா (National)

அஜித்பவார் மனைவி மேல்சபை எம்.பி.யாக தேர்வு

Published On 2024-06-19 08:11 GMT   |   Update On 2024-06-19 08:11 GMT
  • அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா மட்டும் மனுதாக்கல் செய்து இருந்தார்.
  • போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

மும்பை:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பிரபுல் படேல் தனது மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதனால் மராட்டியத்தில் ஒரே ஒரு இடம் காலியானது.

இந்த மேல்சபை எம்.பி. பதவிக்கு மராட்டிய துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா மட்டும் மனுதாக்கல் செய்து இருந்தார்.

இந்த நிலையில் சுனேத்ரா பவார் மேல்சபை எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மராட்டிய சட்டமன்ற செயலாளர் ஜிதேந்திர போலே தெரிவித்தார்.

Tags:    

Similar News