இந்தியா (National)

எனது கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்: ஆர்.எஸ்.எஸ். தலைவரை சாடிய கெஜ்ரிவால்

Published On 2024-09-22 21:22 GMT   |   Update On 2024-09-22 21:24 GMT
  • டெல்லியின் ஜந்தர்மந்தர் பகுதியில் ஆம் ஆத்மி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
  • இதில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் ஜந்தர்மந்தர் பகுதியில் ஆம் ஆத்மி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

அப்போது, பிரதமர் மோடியை கடுமையாக சாடிய அவர், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திற்கு 5 கேள்விகளை எழுப்பினார்.

அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோர் 75 வயதில் ஓய்வு பெற்றனர். பா.ஜ.க.வின் இந்த விதி மோடிக்கு பொருந்தாது என அமித் ஷா கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

எதிர்க்கட்சியில் இருக்கும் தலைவர்களை ஊழல்வாதிகள் என பா.ஜ.க. அழைக்கிறது. பின், அவர்களையே கட்சியில் இணைத்துக் கொள்கிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பா.ஜ.க.வுக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை என அக்கட்சி தலைவர் நட்டா கூறிய போது, நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளை உடைத்து, ஆட்சியை கவிழ்த்து பா.ஜ.க. தற்போது செய்து வரும் அரசியல், உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

பா.ஜ.க.வின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். தன் குழந்தை தவறு செய்யும்போது கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தாய்க்கு உள்ளது. மகன் தற்போது பெரிய மனிதராகி விட்டார். அவர் தவறு செய்யும் போது அதை தட்டிக் கேட்க வேண்டியது உங்கள் பொறுப்பு இல்லையா? என்றார்.

Tags:    

Similar News