இந்தியா (National)

கால்வாயான சாலை, நீந்திய கார்கள்...

Published On 2024-10-17 02:05 GMT   |   Update On 2024-10-17 02:05 GMT
  • ஆந்திரா, கர்நாடகாவில் இரவில் மழை வெளுத்து வாங்கியது. பகலிலும் மழை நீடித்தது.
  • பணிகளுக்கு புறப்பட்டவர்கள் பரிதவித்தபடி சென்றனர்.

வடகிழக்கு பருவமழை வந்தாலே சென்னை மிதக்கும், இது வாடிக்கைதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது சென்னை நிலவரம் அல்ல. ஐ.டி. நகரமான பெங்களூருவில்தான் நிலைமை மோசமாகி இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக பெய்த கனமழை, இரவில் ஓய்ந்தது. ஆனால் ஆந்திரா, கர்நாடகாவில் இரவில் மழை வெளுத்து வாங்கியது. பகலிலும் மழை நீடித்தது. மன்யாதா டெக் பார்க் பகுதியில்தான் சாலை, கால்வாய்போல வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதில் கார்கள் நீந்தி செல்வதுபோல மெதுவாக ஊர்ந்து சென்றன.

இதனால் பணிகளுக்கு புறப்பட்டவர்கள் பரிதவித்தபடி சென்றனர். இதுகுறித்த வீடியோ காட்சி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது. சுமார் 2½ லட்சம் பேர் வீடியோவை பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News