இந்தியா

கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்த மணமகளின் தந்தை

Published On 2024-06-29 04:57 GMT   |   Update On 2024-06-29 04:57 GMT
  • மணமகள் வீட்டார் தன்னை உடனடியாக தொடர்பு கொண்டு திருமண பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டுவார்கள் என ராகுல் கருதி உள்ளார்.
  • சாட்டிங் விபரங்களை ராகுலின் உறவினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில், அது வைரலாகியது.

இந்தியா- இங்கிலாந்து டி-20 உலக கோப்பை அரையிறுதி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பயனர் ஒருவர் தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ராகுல் என்ற வாலிபர் திருமணத்திற்கு தயாராகி வருகிறார். அவர் ஆன்லைனில் வரன் பார்க்கும் தளம் ஒன்றில் மணமகள் ஒருவரால் ஈர்க்கப்பட்டுள்ளார். உடனே அந்த பெண் வீட்டாரை தொடர்பு கொள்வதற்காக ஆன்லைன் தளத்தின் பிரத்யேக சாட்டிங்கை பயன்படுத்தினார். அதன்மூலம் தன்னை அறிமுகப்படுத்திய அவர் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் சம்பளம் பெறுகிறேன் என கூறியுள்ளார். இதைப்பார்த்ததும் மணமகள் வீட்டார் தன்னை உடனடியாக தொடர்பு கொண்டு திருமண பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டுவார்கள் என ராகுல் கருதி உள்ளார்.

ஆனால் மறுமுனையில் அவரை தொடர்பு கொண்டவர், மணமகள் பிரியங்காவின் தந்தை என அறிமுகம் செய்து கொண்டதோடு, கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருக்கிறது. மேட்ச் முடிந்ததும் பேசலாம் என உரையாடலை துண்டித்துள்ளார். இந்த சாட்டிங் விபரங்களை ராகுலின் உறவினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில், அது வைரலாகியது. ஆண்டுக்கு ரூ.70 லட்சம் சம்பாதிக்கும் மாப்பிள்ளையைவிட பெண்ணை பெற்றவருக்கு கிரிக்கெட் போட்டி முக்கியமாகிவிட்டதா? என பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News