கர்நாடகாவில் பயங்கர விபத்து- லாரி மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு
- விபத்தில், சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு வித்ராயண்புராவை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி (வயது 60) தனது நண்பர்களுடன் சித்ரதுர்கா மாவட்டம் சவதத்தியில் உள்ள எல்லம்மா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர். பிறகு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதுடன், உள்ளிருந்த 5 பேர் படுகாயம் சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
விரைந்து வந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.