இந்தியா

கலிபோர்னியாவில் இந்து கோவில் மீது தாக்குதல் - இந்தியா கண்டனம்

Published On 2025-03-09 13:11 IST   |   Update On 2025-03-09 13:11:00 IST
  • சுவாமி நாராயணன் கோவில் அமைந்துள்ளது.
  • பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினோ ஹில்ஸ் பகுதியில் சுவாமி நாராயணன் கோவில் அமைந்துள்ளது.

கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கோவில் போன்ற புனித தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

"சினோ ஹில்ஸ்-இல் உள்ள இந்து கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது போன்ற சம்பவங்களை மிக கடுமையாக கண்டிக்கிறோம். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மேலும், வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம்," என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சாஸ்தா (பாப்ஸ்) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த முறை கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள மற்றொரு கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்து சமூகம் வெறுப்புக்கு எதிராக உறுதியாக நிற்கிறது. சினோ ஹில்ஸ் மர்றும் தெற்கு கலிபோர்னியாவில் வெறுப்பை வேரூன்ற விடாமல் தடுக்க இணைந்து போராடுவோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News