null
காங்கிரசின் 140 ஆண்டுகால வரலாற்றில் மிகவும் மோசமான தலைவர் ராகுல் காந்தி தான்.. பாஜக அடித்த ரிவீட்!
- காங்கிரசில் இருந்துகொண்டு பாஜகவுக்காக உழைக்கும் கட்சித் தலைவர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
- அந்த வகையில் ராகுல், பாஜகவின் மிகப்பெரிய துருப்புச் சீட்டு என்று தெரிவித்தார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று கட்சியினரிடையே உரையாற்றினார்.
கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, குஜராத்தில் காங்கிரசில் இருந்துகொண்டு, பதவிகளை வகித்துக்கொண்டு பாஜகவுக்காக உழைக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, 140 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற தலைவர் (ராகுல் காந்தி) குஜராத்தில் கட்சித் தொண்டர்களுடன் சந்திப்புகளை நடத்தி வெற்றிக்கான மந்திரத்தை அவர்களுக்குக் கற்பிக்கிறாராம்.
இது அவர்கள் கட்சியின் உள் விவகாரம் என்றாலும், அவரது பேச்சுக்கள் நிச்சயமாக காங்கிரசின் அவலநிலையையும், மோசமடைந்து வரும் அவரின் மனநிலையையும் எடுத்துக்காட்டுகின்றன. அரசியலமைப்பு நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் ஊடகங்களைத் தொடர்ந்து குறை கூறிய பிறகு, அவர்கள் இப்போது தங்கள் சொந்த கட்சியினரையே குறை கூறத் தொடங்கியுள்ளனர்.
ஒரு தலைவர் தனது சொந்தக் கட்சியினரையே இப்படிப் பகிரங்கமாக அவமதிக்கும் உதாரணத்தை நீங்கள் ஒருபோதும் காண முடியாது.
ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்தால், கட்சியில் தான் தான் மிக மோசமான தலைவர் என்பதை உணர்வார். ராகுல் காந்தியும் அவரது தாயார் சோனியா காந்தியும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து, காங்கிரசின் நிலை மோசமடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்த மற்றோரு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாஜாத் பூனாவாலா, ராகுல் காந்தி குஜராத்தில் தன்னையும் தனது கட்சியையும் ட்ரோல் செய்து, தன்னை ஒரு கண்ணாடியாகக் காட்டிக் கொண்டார்.
அவர் தனது தோல்விகளுக்கு கார்கே ஜியையும் அவரது சொந்தக் கட்சித் தொண்டர்களையும் குற்றம் சாட்டுகிறார். ஆனால் 90க்கும் மேற்பட்ட தேர்தல்களில் தனது கட்சியை ராகுல் தான் தோற்கடித்தார். அந்த வகையில் ராகுல், பாஜகவின் மிகப்பெரிய துருப்புச் சீட்டு என்று தெரிவித்தார்.