இந்தியா

இன்னும் முடியல.. 2 நாள் கனமழை தொடரும் - ஆர்ஞ்சு அலர்ட்-இல் டெல்லி

Published On 2024-06-30 05:19 GMT   |   Update On 2024-06-30 05:19 GMT
  • கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
  • இன்றும், நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக டெல்லியில் வெள்ளம் சூழ்ந்ததால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 1) கனமழைக்கான ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும்.

டெல்லியில் பருவமழை தொடங்கிய முதல் நாளில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமை மட்டும் டெல்லியில் 228.1mm அளவு மழை பெய்துள்ளது. கடந்த 1936 ஆண்டுக்கு பிறகு, ஒரே நாளில் பெய்த அதிகனமழை இது ஆகும். 

Tags:    

Similar News