இந்தியா (National)

இந்த ரெண்டு பேருல யார சூஸ் பண்ணுவீங்க?.. வில்லங்கமான கேள்விக்கு ஜெய்சங்கர் கொடுத்த அல்டிமேட் பதில்

Published On 2024-10-06 14:36 GMT   |   Update On 2024-10-06 14:36 GMT
  • பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கருத்து கூறி வருபவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ்.
  • இருவரில் யாரை சொன்னாலும் அது சங்கடத்தை ஏற்படுத்தும்

ஏவுகணை பரிசோதனை, ரஷியாவுடன் நெருக்கம் என்று மேற்கு நாடுகளால் பெரும் இடைஞ்சலாகப் பார்க்கப்படுபவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். அதானி நிறுவன ஊழல் உள்ளிட்ட சர்ச்சைகளை முன்வைத்து பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கருத்து கூறி வருபவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ்.

இந்த இருவரில் யாரவது ஒருவருடன் இரவு விருந்து சாப்பிட வேண்டும் என்றால் யாருடன் சாப்பிடுவீர்கள் என்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரிடம் ஒரு வில்லங்கமான கேள்வி கேட்கப்பட்டது.

இருவரில் யாரை சொன்னாலும் அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சிய ஜெய்சங்கர் கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ''இது நவராத்திரி காலம், அதனால் நான் விரதம் இருக்கிறேன்'' என்று கூறி ஜெய்சங்கர் சாமர்த்தியமாக நழுவியுள்ளார். 

Tags:    

Similar News