இந்தியா (National)

மும்பையில் நடந்த தமிழ்நாடு, குஜராத் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம்-எச்.ராஜா, டாக்டர் தமிழிசை பங்கேற்பு

Published On 2024-10-01 07:36 GMT   |   Update On 2024-10-01 07:36 GMT
  • தமிழ்நாடு, குஜராத் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை.
  • தமிழ்நாடு, குஜராத் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை. கூட்டத்தில் தேர்தல் பணிகளை எவ்வாறு நடத்துவது என்று விவாதித்தனர்.

சென்னை:

மராட்டிய மாநில சட்ட சபைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குள் பா.ஜ.க. தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

மும்பையில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். அவர்கள் மத்தியில் ஆதரவு திரட்டுவதற்காக அந்த மாநிலங்களை சேர்ந்த பா.ஜ.க.வினரை அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.

அதன்படி தமிழ்நாடு, குஜராத் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். மும்பையில் நடந்த இந்த கூட்டத்துக்கு மத்திய மந்திரியும் தேர்தல் பொறுப்பாளருமான பூபேந்திர யாதவ், இணை பொறுப்பாளர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கருப்பு முருகானந்தம், ஏ.கே.முருகானந்தம், வினோஜ் செல்வம், கரு நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் தேர்தல் பணிகளை எவ்வாறு நடத்துவது என்று விவாதித்தனர். தேர்தல் தேதி அறிவித்ததும் தலைவர்களுக்கு ஒதுக்கப்படும் பகுதிகள், வீடு வீடாக சென்று ஆதரவு திரட்ட வேண்டியவர்கள் அவர்களுக்கான பகுதிகள், அமைப்பு ரீதியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியவர்கள் என ஒவ்வொரு வருக்கும் பணிகள் பிரித்து கொடுக்கப்பட உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இது பற்றிய பட்டியல் தயாரித்து வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்கள்.

Tags:    

Similar News