இந்தியா (National)

புதுச்சேரியில் மின்தடையா? புகார் அளிக்க 24 மணி நேர இலவச சேவை மையம்

Published On 2024-09-29 05:14 GMT   |   Update On 2024-09-29 07:06 GMT
  • கடந்த ஆகஸ்டு மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.
  • அவசர காலங்களில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் மின்தடை பிரச்சனை குறைகளை பெற்று சரி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் இலவச சேவை மையம் அமலுக்கு வந்தது. இது குறித்து மின்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:-

மின்துறையின் 1912 மற்றும் 18004251912 ஆகிய எண்களுடன் கூடிய 24 மணிநேர மின் உபயோகிப்பாளர் இலவச சேவை மையம் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் பொதுவான அல்லது தனிநபர் இணைப்புகளில் மின்தடை ஏற்படும் போது இரவு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் யாரிடம் தகவல் தெரிவிப்பது என்று ஒரு குழப்பமான சூழ்நிலையில் மக்கள் தவித்து வந்தனர்.

உரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் போது அவர்களது செல்போன் இணைப்பு கிடைப்பதில்லை. அடுத்தபடியாக அலுவலகத்திற்கு நேரில் சென்று தகவல் சொல்ல சென்றால் அலுவலகம் பூட்டி இருக்கிறது.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் விதமாக 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சேவை மையத்தின் மூலம் பெறப்படும் தகவல்கள் உடனடியாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்-ஆப் வாயிலாகவும் எஸ்.எம்.எஸ். மூலமும் உரிய பகுதியை சார்ந்த அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு மின்தடை சரி செய்யப்படும். அவசர காலங்களில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் உதவியாக இருக்கும்.

எனவே, மின்துறையின் 1912 மற்றும் 1800425191224 நேர மின்துறை சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றனர்.

Tags:    

Similar News