இந்தியா (National)

அசாமில் வகுப்பறையில் ஆசிரியர் குத்தி கொலை- மாணவன் வெறிச்செயல்

Published On 2024-07-07 06:03 GMT   |   Update On 2024-07-07 06:03 GMT
  • மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியே ஓடினர்.
  • தகவல் அறிந்த போலீசார் ஆசிரியர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

அசாம் மாநிலம், சிவசேகர் நகர் அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு இருந்தார்.

அப்போது வகுப்பறையில் இருந்த மாணவர் ஒருவர் படத்தை கவனிக்காமல் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு இருந்தார். இதனை கவனித்த ஆசிரியர் மாணவனை திட்டி வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பினார்.

வெளியே சென்ற மாணவன் அங்குள்ள ஒரு கடைக்குச் சென்று கத்தியை வாங்கிக் கொண்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் வகுப்பறைக்கு வந்தான். வகுப்பறைக்கு வந்த மாணவனை ஆசிரியர் மீண்டும் திட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சக மாணவர்கள் முன்னிலையில் சரமாரியாக குத்தினான்.

இதில் ஆசிரியர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனைக் கண்ட சக மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியே ஓடினர்.

ஆசிரியரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆசிரியர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மாணவனை கைது செய்தனர்.

Tags:    

Similar News