இந்தியா

ஜெயிலில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு 60 அடியில் கட் அவுட்

Published On 2023-11-06 05:09 GMT   |   Update On 2023-11-06 05:09 GMT
  • தியாகராஜா என்பவர் சந்திரபாபு நாயுடுக்கு 60 அடியில் கட் அவுட் வைத்து உள்ளார்
  • சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கும் 60 அடியில் கட் அவுட் தயார் செய்யப்பட்டு வந்தது.

திருப்பதி:

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு கடந்த வாரம் ஆந்திர ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. சந்திரபாபு நாயுடு ஜாமீனில் வெளியே வந்ததை அவரது கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிலையில் கார்வேட் நகரை சேர்ந்த கொண்டூர் தியாகராஜா என்பவர் சந்திரபாபு நாயுடுக்கு 60 அடியில் கட் அவுட் வைத்து உள்ளார். இதேபோல் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கும் 60 அடியில் கட் அவுட் தயார் செய்யப்பட்டு வந்தது. பாதி பணிகள் முடிவடைந்த நிலையில் கட் அவுட் வைக்க பஞ்சாயத்து அலுவலகத்தில் அனுமதி வழங்காததால் பணிகள் நிறுத்தப்பட்டதாக தியாகராஜா தெரிவித்தார்.

Tags:    

Similar News