இந்தியா

திருமணமான 3 மாதத்தில் மருத்துவ மாணவி தற்கொலை- வரதட்சணை கொடுமையால் விபரீதம்

Published On 2023-07-03 04:52 GMT   |   Update On 2023-07-03 04:52 GMT
  • நெல்லூர் போலீசார் மாணவி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் வஜ்ர கொத்தூரை சேர்ந்தவர் ஜோதி குமாரி. இவரது மகள் சைதன்யா (வயது 24). நெல்லூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் சைதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரத் சந்திரா என்பவருக்கும் திருமணம் நடந்தது. சரத் சந்திரா டாக்டராக உள்ளார்.

திருமணத்தின் போது கொடுத்ததை விட அதிக அளவில் நகை பணம் கேட்டு சைதன்யாவை துன்புறுத்தி வந்தார். சைதன்யாவின் தாய் ஜோதிகுமாரி சரத் சந்திரா கேட்ட நகை பணத்தை கொடுத்தார்.

இருப்பினும் கார் வாங்கி தரும்படி அடித்து துன்புறுத்தி வந்தார். ஆடி மாதம் முடிந்தவுடன் கார் வாங்கி தருவதாக ஜோதி குமாரி தனது மாப்பிள்ளையிடம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சைதன்யாவுக்கு போன் செய்த அவரது கணவர் போனில் ஆபாசமாக திட்டினார்.

இதனால் மனம் உடைந்த சைதன்யா தனது தாய்க்கு போன் செய்து கணவரின் தொல்லை அதிகரித்து விட்டதால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு போனை சுவிட்ச்-ஆப் செய்து விட்டார்.

உடனே விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லூர் போலீசார் மாணவி உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News