இந்தியா (National)

அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டரை தாக்கிய நோயாளி கைது

Published On 2024-09-17 06:10 GMT   |   Update On 2024-09-17 06:10 GMT
  • குடிபோதையில் இருந்த ஷைஜூ, திடீரென தனக்கு சிகிச்சையளித்த பெண் டாக்டரின் கையை பிடித்து முறுக்கி தாக்கியுள்ளார்.
  • அம்பலப்புழா போலீஸ் நிலையத்தில் பெண் டாக்டர் அஞ்சலி புகார் செய்தார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா தகழி பகுதியை சேர்ந்தவர் ஷைஜூ. சம்பவத்தன்று இவர் தனது நெற்றியில் எற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற ஆலப்புழா அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அஞ்சலி என்ற பெண் மருத்துவர், சிகிச்சை அளித்துள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த ஷைஜூ, திடீரென தனக்கு சிகிச்சையளித்த பெண் டாக்டரின் கையை பிடித்து முறுக்கி தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அம்பலப்புழா போலீஸ் நிலையத்தில் பெண் டாக்டர் அஞ்சலி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஷைஜூவை கைது செய்தனர்.

Tags:    

Similar News