இந்தியா (National)

ஆண் நண்பரை விரட்டிவிட்டு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்

Published On 2024-10-24 05:36 GMT   |   Update On 2024-10-24 05:36 GMT
  • சிறுமியை வலுக்கட்டாயமாக படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.
  • ரவிக்குமார் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம், ஹனம் கொண்டா மாவட்டம், வாடே பள்ளியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் ஐதராபாத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

சிறுமி தன்னுடன் படிக்கும் நண்பருடன் குடியிருப்பு பகுதியில் பேசிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சிறுமியின் நண்பரை அங்கிருந்து விரட்டி அனுப்பினார். பின்னர் சிறுமியிடம் இது போல் தவறாக நடக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். சிறுமியின் செல்போன் என்னை வாங்கினார்.

இதையடுத்து சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியை வலுக்கட்டாயமாக படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி இன்ஸ்பெக்டரிடம் இருந்து போராடி அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் காசிபேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News