இந்தியா

இறந்த அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு - ஊழியர்கள் அதிர்ச்சி

Published On 2024-07-13 06:38 GMT   |   Update On 2024-07-13 06:38 GMT
  • கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி உடல்நிலை குறைவு காரணமாக இவர் மரணமடைந்தார்.
  • இறுதி சடங்கில் அவருடன் பணியாற்றிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் திக்காவன் கிராமத்தை சேர்ந்தவர் அசோகா பீமாராய புடபக் (54). இவர் சேடம் நகராட்சியல் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி உடல்நலக் குறைவு காரணமாக இவர் மரணமடைந்தார்.

மறுநாள் 13-ந் தேதி அவரது கிராமத்தில் நடைபெற்ற இறுதி சடங்கில் அவருடன் பணியாற்றிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் அவர் இறந்து 6 மாதம் ஆன நிலையில் கடந்த 9-ந் தேதி அவரை குடகு மாவட்டம் மடிக்கேரி நகராட்சிக்கு இடமாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரி இறந்து 6 மாதம் கழித்து அவருக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்ட சம்பவம் நகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News