சிறப்புக் கட்டுரைகள்

சோதனைக்குழாய் முறையில் செயற்கை கருத்தரிப்பு

Published On 2025-02-12 14:38 IST   |   Update On 2025-02-12 14:38:00 IST
  • கன்ட்ரோல் ஓவரியன் ஸ்டிமுலேஷன் படி முட்டைகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
  • கர்ப்பப்பையில் கருவை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று சில வரைமுறைகள் இருக்கிறது.

குழந்தையின்மை சிகிச்சையை பொருத்த வரையில் சோதனைக்குழாய் குழந்தைக்கு தம்பதிகள் தயாராக உள்ள நிலையில், ஐ.வி.எப். சோதனைக்குழாய் நவீன சிகிச்சை முறையில் கருவாக்கம் செய்து குழந்தை பேறு உருவாக்கும் ஒவ்வொரு வழிமுறை களையும் விரிவாக பார்க்கலாம்.

கருமுட்டைகளின் வளர்ச்சியை அதிகரித்தல்:

சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஐ.வி.எப். கருத்தரிப்பு முறையின் ஆரம்ப நிலையே கன்ட்ரோல் ஓவரியன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் எனப்படும் கருமுட்டைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் நிலை ஆகும். பொதுவாக பெண்களின் சினைப்பையின் உள்ளே கருமுட்டைகள் இருக்கும். அந்த முட்டைகள் நாம் நினைப்பது போல ஸ்கேனில் தெரியாது. வழக்கமாக எல்லா நோயாளிகளும் டாக்டர்களிடம் இப்படி கேட்பதுண்டு, 'டாக்டர்... சினைப்பையில் 10-க்கும் மேற்பட்ட முட்டைகள் இருப்பது போல் தெரிந்ததே, 6 முட்டைகள் தான் வந்ததா' என்பார்கள்.

சினைப்பை அறைக்குள் இருக்கும் முட்டைகள் ஸ்கேனில் தெரியாது. ஏனென்றால் கருமுட்டைகள் என்பது செல் ஆகும். இதை மைக்ரோஸ்கோப்பால் மட்டும் தான் பார்க்க முடியும். அதாவது சினைப்பையில் உள்ள பாலிக்குலர் திரவத்தை எடுத்து, அந்த திரவத்தில் உள்ள முட்டைகளை பிரித்து எடுத்து அதை மைக்ரோஸ்கோப்பில் பரிசோதித்து பார்க்க முடியும்.

சோதனைக்குழாய் முறையில் 2 சினைப்பையிலும் முட்டை களின் வளர்ச்சியை தூண்டு வதற்கான ஊசி கொடுப்போம். இதுதான் கன்ட்ரோல் ஓவரியன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் எனப்ப டும் படிநிலையாகும். சோதனைக் குழாய் குழந்தை சிகிச்சையை பொருத்த வரையில் இது ஒரு முக்கிய மான விஷயம். ஏனென் றால் முட்டைகளின் தரம், முட்டைகளின் எண்ணிக்கை, முட்டைகளின் கருத்தரிக்கும் திறன் ஆகியவை எல்லாமே இந்த முட்டைகளின் வளர்ச்சியில் தான் இருக்கிறது.

ஆரோக்கியமான பெண்ணாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு 10 முதல் 15 கருமுட்டைகள் வந்தால் அந்த பெண்ணுக்கு எந்தவித பிரச்சினைகளும் வராது. அந்த முட்டைகளின் எண்ணிக்கை சீராகவும், தரமாகவும் இருக்கும். இந்த முட்டைகளை சீராக வளர வைப்பதற்கு அதற்கான ஊசி செலுத்துவோம்.

முட்டையின் நல்ல கருவாக்கத்திற்கான அடிப்படை:

இந்த சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டுமென்றால் சில நெறிமுறைகள் இருக்கிறது. அதன்படி உங்களுடைய மருத்துவர் என்ன நெறிமுறைகளை நிர்ணயிக்கிறார்களோ, அந்த நெறிமுறைகள் படிதான் முட்டைகளின் வளர்ச்சியை தூண்டுவார்கள். இந்த முட்டைகள் வளர்ச்சி தூண்டுதலுக்கான ஊசி, மருந்துகளை 10 முதல் 15 நாட்கள் கொடுப்பார்கள். அந்த முட்டைகளின் வளர்ச்சியை பரிசோதித்து அதற்கு ஏற்ப மருந்து கொடுப்பார்கள்.

அதன் மூலமாக முட்டை வளர்ச்சி சீராக அமைய அந்த மருந்துகள் உபயோகமாக இருக்கும். இந்த கன்ட்ரோல் ஓவரியன் ஸ்டிமுலேஷன் வழிமுறை நன்றாக அமைய என்ன ஊசி பயன்படுத்துகிறோம், ஒவ்வொ ருவரின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். அதனுடைய பலன் எப்படி இருக்கிறது என்பதை சில ரத்த பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொள்வோம். சிலர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலமாகவும் தெரிந்து கொள்வார்கள்.

பெண்களின் கருமுட்டைகளுக்கு தூண்டுதல் கொடுக்கின்ற 15 நாட்களில், முதல் 3 நாட்கள் தினமும் ஊசி போட வேண்டி இருக்கும். அந்த முட்டைகளின் வளர்ச்சியை 3 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டி இருக்கும். தேவைப்பட்டால் சில ரத்த பரிசோதனைகள் செய்து சீரான நிலையில் முட்டை வளருகிறதா என்பதை பார்க்க வேண்டும்.

இந்த கன்ட்ரோல் ஓவரியன் ஸ்டிமுலேஷன் என்பது, ஒரு மருத்துவர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயமாகும். பொதுவாக ஐ.வி.எப். அனுபவம் பெற்ற மருத்துவர்கள் தான் செய்ய வேண்டும். அனுபவம் பெற்ற மருத்துவர்கள்செய்யும் போதுதான் முட்டைகளின் வளர்ச்சி சீராக இருக்கிறதா, அதனுடைய ஹார்மோன் சரியாக இருக்கிறதா என்பதை சரியாக தெரிந்து கொள்ள முடியும். இதுதான் முட்டையை நல்ல ஒரு கருவாக்குவதற்கான அடிப்படையாக அமைகிறது.

முட்டையில் விந்தணுவை ஊசி மூலம் செலுத்துதல்:

எனவே கன்ட்ரோல் ஓவரியன் ஸ்டிமுலேஷன் படி முட்டைகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது. அது முறையாக தம்பதிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. முட்டை முதிர்ச்சியான பிறகு முட்டையை சேகரிப்பதற்காக ஒரு தினத்தை சொல்வோம். இதற்கு ஒரு தூண்டுதல் ஊசி கொடுப்போம். அந்த தூண்டுதல் ஊசி கொடுத்த 34 முதல் 36 மணி நேரத்தில் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து சினைப்பையில் இருந்து முட்டைகளை பிரித்து எடுப்போம்.

முட்டைகளை எடுத்த பிறகு, கணவரின் விந்தணுக்களை எடுத்து கொடுப்பார்கள். பொதுவாக விந்தணுக்கள் இயல்பாக இருக்கும் ஆண்களுக்கு சேகரித்து வைத்த விந்த ணுக்களை கொடுத்துவிடுவார்கள். அந்த விந்தணுக்களில் ஏதாவது சில பிரச்சினைகள் இருந்தால், முதலிலேயே சில விந்தணுகளை எடுத்து உறை நிலையில் வைத்திருப்பார்கள். அதில் இருந்து நல்ல விந்தணுகளை சில செயல் முறை மூலமாக பிரித்து எடுப்பார்கள்.

இந்த நல்ல விந்தணுக்களை பிரித்து எடுத்து அந்த விந்தணுக்கள் மூலம் ஐ.வி.எப். செய்யும் போது ஒரு முட்டைக்கு 10 ஆயிரம் விந்தணுக்கள் செலுத்துவார்கள். இதுவே இக்சி என்றால் ஒரு முட்டைக்கு ஒரு விந்தணுவை ஊசி மூலம் செலுத்து வார்கள். முட்டையை எடுத்த 4 மணி நேரத்துக்குள் இந்த செயல்முறையை ஆய்வகத்தில் செய்வார்கள்.

ஆய்வகத்தில் கரு வளரும் முறை:

இந்த ஆய்வகம் மிகவும் தரமானதாக இருக்கும். மிகவும் சுத்தமாக சுகாதாரமான முறையில் இருக்கும். இதில் விளக்குகள் இருக்காது, இருட்டாக இருக்கும். குளிர்சாதன வசதி இருக்காது. கருமுட்டைகள் சென்சிட்டிவாக இருப்பதால், இதுபோன்ற சில வழிமுறைகளை அதற்கேற்ற சூழ்நிலை களில் வைத்திருக்க வேண்டும். அதன்படி அந்த முட்டைகளை ஐ.வி.எப். முறையிலோ, இக்சி முறையிலோ கருவாக்கம் செய்து இந்த கருவை இன்குபேட்டர்களில் வளர்ப்பார்கள்.

இந்த இன்குபேட்டரில் ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு சேர்ந்து வாயு செல்லும். அதன் மூலம் ஆய்வகத்தில் கரு வளரும். பெண்ணின் கருக்குழாயில் கரு வளரும் அதே சூழல்களை ஆய்வகத்தில் வைத்தி ருப்பார்கள். இதை 3 நாட்கள் கரு மற்றும் 5 நாட்கள் கரு வரை வளர வைப்போம். அதன் வளர்ச்சியை கருவியல் நிபுணர் பரிசோதனை செய்வார்.

 

முட்டைகளும், விந்தணுக்களும் நன்றாக இருந்தால் உருவாகும் கருவும் நன்றாக இருக்கும் என்ற வகையில் 3 முதல் 5 நாள் வரை வளர வைத்து இந்த கருவை பெண்ணின் கர்ப்பப்பையில் வைப்போம். எனவே முட்டைகளின் வளர்ச்சியை தூண்டுதல், முட்டை சேகரிப்பு, ஆய்வகத்தில் கருவை வளர்த்தல், வளர்ந்த கருவை பெண்ணின் கர்ப்பப்பைக்கு மாற்றுதல் ஆகிய 4 முறைகளுமே மிகவும் முக்கியமானவை ஆகும்.

கர்ப்பப்பையில் கருவை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று சில வரைமுறைகள் இருக்கிறது. எந்த அளவு நீளத்தில் வைக்க வேண்டும், என்ன நிலையில் வைக்க வேண்டும், எப்படி வைத்தால் கரு கப்பப்பையை ஒட்டி வளரும் என்கிற முறைப்படி அதை வைக்கும்போது கரு ஒட்டி வளருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

கரு வளர்ச்சியை பார்ப்பதற்கான பரிசோதனை:

பொதுவாக இந்த கரு வளரும்போது கருவை வைத்த பிறகு அது வளருவதற்கு தேவையான புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் மற்றும் ஊக்குவிப்பு மருந்துகள் கொடுக்கும்போது இந்த கருவானது கர்ப்பப்பையில் நன்றாக ஒட்டி வளரும். கருவை வைத்த 14 அல்லது 15-வது நாளில் அந்த கரு வளர்ந்திருக்கிறதா என்பதை ஒரு பீட்டா எச்.சி.ஜி. சோதனை மூலமாக பரிசோதிப்போம். இதன் மூலம் கரு வளர்ச்சியை சீராக பார்க்க முடியும்.

ஒரு கருவானது ஆரோக்கியமாக வளருவதற்கு இத்தனை விஷயங்கள் சீராக இருக்க வேண்டும். அந்த வகையில் சீராக இருந்தால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வெற்றி விகிதத்தில் கரு வளருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒரு நல்ல ஐ.வி.எப். கருத்தரிப்பு முறை என்றால் 10 முதல் 15 முட்டைகள் வரவேண்டும். அதில் 8 முதல் 9 கரு நன்றாக உருவாக வேண்டும்.

 

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

அதில் 5 நாள் கரு நன்றாக உருவானால், அது ஒட்டி வளருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பல நேரங்களில் இந்த கருவை அதே மாதத்தில் பரிமாற்றம் செய்வோம், சிலருக்கு கருவை உறை நிலையில் வைத்து விடுவோம். ஏனென்றால் சிலருக்கு ஹார்மோன் அதிகமாக இருக்கும், கருப்பை வரிசை சீராக இருக்காது, பல நேரங்களில் உடல் ரீதியாக அந்த பெண்ணுக்கு சினைப்பை பெரிதாகி வலிகள் இருக்கும்.

இந்த மாதிரி ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனடியாக கருவை பரிமாற்றம் செய்ய மாட்டோம். எல்லா கருவையும் உறைநிலையில் வைத்து விடுவோம். மைனஸ் 192 டிகிரி லிக்யூட் நைட்ரஜனில் கருவானது உறை நிலையில் இருக்கும். உறை நிலையில் வைத்த கருவை அடுத்தடுத்த மாதங்களில் திரும்ப கர்ப்பப்பையில் செலுத்துவோம்.

இந்த வகையில் ஐ.வி.எப். சோதனைக்குழாய் செயற்கை கருத்தரிப்பு முறைக்கு கிட்டத்தட்ட 35 நாட்கள் தேவைப்படுகிறது. அதாவது முட்டைகளின் வளர்ச்சியை தூண்டி, கரு முட்டைகளை எடுப்பதற்காக 15 நாட்கள் தேவைப்படுகிறது. பின்னர் கருவை 5 நாட்கள் வரை ஆய்வகத்தில் வளர்த்து கருப்பையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பரிமாற்றம் செய்த 15-வது நாளில் பரிசோதனை செய்து அதனுடைய வெற்றி விகிதத்தை அறியலாம். அதன் மூலம் அவர்கள் குழந்தை பேறு அடைவது உறுதி செய்யப்படும்.

Tags:    

Similar News