நோய்களை தீர்க்கும் குறிப்புகள்!
- நமது உணவில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஒரு பொருள் வெங்காயம்.
- சியா விதைகளை பகல், இரவு உணவிற்கு 20 நிமிடங்கள் முன்னால் எடுத்துக் கொள்வது அதிக உணவினைத் தவிர்க்கும்.
சில நிகழ்வுகள், சில செயல்கள், சில யோசனைகள் இவை நம்மை அப்படியே மனமொடிந்து, பலமிழந்து இருப்பது போல் ஆக்கி விடும். மிகப்பெரிய தாக்குதல்கள் யாராக இருந்தாலும் உலுக்கி விடும். ஆனால் சிறு சிறு விஷயங்களில் நம்மை நாமே மீட்டுக் கொண்டு வெளிவர வேண்டும். இதற்கான சில முயற்சிகளாக கீழே குறிப்பிடப்பட்ட வைகளை செய்து பார்ப்போமே.
மனம் கட்டுக்கடங்காது அதிகம் யோசித்துக் கொண்டே இருக்கின்றதா? ஒரு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள், எவையெல்லாம் உங்களை பாதிக்கின்றதோ, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அவை களை பொறுமையாய் எழுதுங்கள். மனம் அமைதி படுவது தெரியும். இந்த அமைதி நல்ல நிம்மதி தரும்.
என்ன ஆகுமோ, என்ன ஆகுமோ என்று கவலை பிய்க்கின்றதா? ஓர் இடத்தில் அமருங்கள். கண்களை மென்மையாய் மூடிக் கொள்ளுங்கள். குறைந்தது 10 முறை ஆழ்ந்து மூச்சு விட்டெடுங்கள். கவலை, படபடப்பு கட்டுப்படும்.
பொறுமை இல்லாது நடந்து கொள்கின்றீர்களா? அசையாமல் 5 நிமிடம் அமருங்கள். கண்களை மென்மையாய் மூடிக் கொள்ளுங்கள். எதனையும் பற்றி சிந்திக்க வேண்டாம். இது முடியவில்லையா? மூச்சு உள் செல்வதையும், வெளியே வருவதனையும் கவனியுங்கள்.
மன மகிழ்ச்சி இல்லையா- கிடைத்த பல நன்மைகளை எழுதி இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். மனம் ஆரவாரமற்ற மகிழ்ச்சி பெரும்.
வாழ்க்கையினை தொலைத்து விட்டது போல் இருக்கின்றதா- வாழ்வில் உங்கள் இலக்குகளை தெளிவாய் எழுதுங்கள்.
சில செயல்களால் குற்ற உணர்வு உங்களை முள்ளாய் குத்துகின்றதா, நம்மை நாமே மன்னிக்க வேண்டும். இனி இவ்வாறு தவறுகளை செய்யாது இருக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சக்தி குறைந்தது போல் உள்ளதா? சில எளிய உடற்பயிற்சிகள் நன்மை தரும்.
பாதுகாப்பு இல்லாதது போல் தோன்றுகின்றதா? உங்கள் சாதனைகளை நீங்களே பட்டியலில் பாருங்கள். உங்களால் பத்து பேருக்கு பாதுகாப்பு அளிக்க முடியும் என்பது புரியும்.
இந்த முயற்சிகளை கையாண்ட பிறகு நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள்.
(கீழ்) கடைசி படிக்கட்டு- நான் முயற்சி செய்ய மாட்டேன்
ஒரு படி மேல் - என்னால் முடியாது
ஒரு படி மேல்- எனக்கும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
ஒரு படி மேல்- எப்படி சாதிப்பது?
ஒரு படி மேல்- நான் முயற்சி செய்கிறேன்
ஒரு படி மேல்- என்னால் முடியும்.
மேல் படிகட்டு, நான் வெற்றி பெற்று விட்டேன். ஆக இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும். எனவே முயற்சிகளை இந்த நிமிடமே மேற்கொள்வோம்.
நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்படும் புண்:
* சுமார் 15 சதவீதம் நீரிழிவு பாதிப்புடையோர் காலில் புண் ஏற்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதில் 6 சதவீத மக்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அளவு பாதிப்பு ஏற்படுகின்றது.
* காலில் உணர்வின்மை * ரத்த ஓட்ட குறைபாடு * கால் குறைபாடு * அழுத்தம் * உரசல் * அடி படுதல் போன்ற பல காரணங்கள் சர்க்கரை நோயாளிகளின் இந்த பாதிப்பிற்கு காரணம் ஆகின்றது
இதனை தவிர்க்கும் முறை என்பது கிருமி தாக்குதல் இன்றி இருத்தல் * அழுத்தம் இன்றி இருத்தல் * காலினை மிக சுத்தமாக வைத்திருத்தல் * சிறு காயத்துக்கும் மருத்துவம் மூலம் நன்கு சிகிச்சை அளித்தல் * சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் * செருப்பு அணிந்து நடத்தல் ஆகியவை ஆகும்.
* அன்றாடம் குளித்த பிறகு கால்களை நன்கு துடைத்து கவனிக்க வேண்டும்.
* முறையான, தரமான காலணிகள் அணிதல் வேண்டும்.
* மாஸ்ட்சரைஸர் தடவுதல் போன்றவையும் அவசியமானவை.
* நகரங்களை சீராய் வெட்ட வேண்டும்.
* சிகரெட், மது தவிர்க்க வேண்டும்.
* கால் நிபுணரின் ஆலோசனை பெற வேண்டும்.
நுரையீரல் புற்றுநோய்:
புற்றுநோய் பாதிப்பிற்கு அதிக கவனம் கொடுக்க வேண்டிய கால சூழல் இருந்து கொண்டுதான் உள்ளது. அவ்வகையில் நுரையீரல் புற்றுநோய்க்கான சில ஆரம்ப கால அறிகுறிகளைப் பார்ப்போம். இவை கண்டிப்பாய் இருக்கும் என்று கூறுவதனை விட கீழ்க்கண்ட அறிகுறிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தினைக் கொள்வோம்.
* தீரா இருமல் * மூச்சு வாங்குதல் * ஆழ் மூச்சின் பொழுது நெஞ்சு வலி * எடை குறைதல் * குரலில் கரகரப்பு * ரத்தம் கலந்த சளி * மேல் முதுகு வலி * அடிக்கடி கிருமி தாக்குதல் * தோள் அல்லது தோள் பட்டை வலி * பலவீனம் ஆகிய அறிகுறிகள் உடனடியாக கவனம் பெற வேண்டியவை. * அதிக சோர்வு * விழுங்குவதில் கடினம் * எலும்பு வலி * ஜூரம் * பசியின்மை * நிமோனியா போன்ற பாதிப்பு ஆகியவையும் இதில் அடங்கும்.
பூசணி விதை:
உணவில் பருப்பு வகைகள், கொட்டை வகைகள் என்பது போல் விதை வகைகளும் இன்று அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. நார் சத்து, வைட்டமின், தாது உப்புகள் நிறைந்தது. வைட்டமின் ப நியாசின் போலேட் மற்றும் மக்னீசியம், விங்க், தாவர இரும்பு, கால்சியம், காப்பர், செலினியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது. பிளாக்ஸ், சிமா, பூசணி, எள், சூரியகாந்தி, தர்பூஸ் விதைகள் நமக்கு எளிதாக கிடைப்பவை.
* காலையில் இவைகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.
* சியா விதைகளை பகல், இரவு உணவிற்கு 20 நிமிடங்கள் முன்னால் எடுத்துக் கொள்வது அதிக உணவினைத் தவிர்க்கும்.
அவ்வகையில் பூசணி விதை புரதச்சத்து நிறைந்தது
கெட்ட கொழுப்பினை நீக்க வல்லது
100 கி விதையில் 30கி புரதம் உள்ளது
* பூஞ்சைகளை அழிக்கும்
* தாது உப்புகள் நிறைந்தது
* தினமும் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாமே
வெங்காயம்:
நமது உணவில் முக்கிய இடத்தை பிடித்துள்ள ஒரு பொருள் வெங்காயம். தேவை, சுவை என்பதனைத் தாண்டி மருந்துவ உலகில் இதற்கு முக்கியத்துவம் உள்ளது. இதனை சமைத்து உண்பதனை விட 2 வில்லைகள் பச்சையாக சாலட் முறையில் உணவில் சேர்த்துக் கொள்வது இனசுலின் சுரப்பினை தூண்டி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது.
* வைட்டமின் சி, பி6 மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்தது
* ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து நிறைந்தது
* இருதயத்திற்கு நல்லது
* வீக்கங்களை குறைக்க வல்லது
* ஜீரண சக்தியினை கூட்ட வல்லது
* புற்றுநோயின் தாக்குதலை எதிர்க்க வல்லது
* சர்க்கரை நோயினை கட்டுப்படுத்த உதவும்
* எலும்புக்கு பாதுகாப்பு அளிப்பது
* சுவாச மண்டல ஆரோக்கியத்திற்கு உதவுவது
* ஞாபகத்திறனை கூட்ட வல்லது
முருங்கை இலை பொடி:
வெங்காயம் போல் முருங்கை இலை பொடியினைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். * கண் நோய்களில் இருந்து காக்கிறது * சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது. * பாதுகாப்பு * சத்து நிறைந்தது * கெட்ட கொழுப்பினை குறைக்க வல்லது. ஆனால் எதனையும் எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
கமலி ஸ்ரீபால்
உயர் ரத்த அழுத்தம்:
பலர் தனக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதே தெரியாமல் இருப்பர். முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மறுப்பர். கீழ்க்காணும் சில அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நன்மை தரும். காப்பாற்றும்.
* இருதய துடிப்பில் ஒரு மாற்றம் இருப்பது போல் உணருவது
* உடல் நலம் சரியில்லாதது போன்ற மன அழுத்தம்
* கண் பார்வை மங்குதல் * காதில் சத்தம் * நெஞ்சு வலி * குழப்பம் * மூச்சு விடுவதில் சிரமம் * மயக்கம் * தலை சுற்றல் * வயிற்றுப் பிரட்டல் * கடும் தலைவலி * மூக்கில் ரத்தம் வடிதல் * வாந்தி
இந்த அறிகுறிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை. உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதன் மூலம் பக்கவாத பாதிப்பு சுமார் 37 சதவீதம், இருதய பாதிப்பு சுமார் 21 சதவீதம், இருதய பாதிப்பால் இறப்பு சுமார் 25 சதவீதம், இதன் தொடர்பாக ஏற்படும் இறப்பு சுமார் 13 சதவீதம் குறைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
சுமார் 50 சதவீத மக்களே உயர் ரத்த அழுத்தத்தினை சிகிச்சை, உடற்பயிற்சி, உரிய கவனம் இவற்றின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
இடது இடுப்புக்கு மேல் பகுதியில் உணர்வின்மை அல்லது மரத்து போகுதல், இடது தாடையில் உணர்வின்மை, இடது தோள் பட்டை உணர்வின்மை மற்றும் ஒருவித வலி உணர்வு இருந்தால் உடன் இருப்பவர் உதவியுடன் மருத்துவமனையினை ஆம்புலன்ஸ் அல்லது வாகன உதவியுடன் அணுகவும். ஸ்கூட்டர், சைக்கிள் இவற்றினை தவிர்க்கவும். உடனடி கவனிப்பு மாரடைப்பு பாதிப்பு இருந்தால் சிகிச்சை மூலம் பலன் பெற பெரிதும் உதவும்.
சூரிய காந்தி விதையின் பயன்கள்:
வீக்கத்தினை குறைக்கும். வைட்டமின் ஈ சத்து நிறைந்தது. சரும ஆரோக்கியம் கூடும். இருதய ஆரோக்கியம் கூடும். கொழுப்பு குறையும். இதில் உள்ள மக்னீசியம் உயர் ரத்த அழுத்தம் குறைய உதவும். இதனாலும் இருதய நோய் பாதிப்புகள் குறையும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சக்தி கூடும். புற்றுநோய் பாதிப்பு அபாயம் குறையும். சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த உதவும். கலோரி சத்து அதிகம் கொண்டது. எனவே சத்துணவு நிபுணர் ஆலோசனை பெற்று அளவோடு எடுத்துக் கொள்ளவும்.