விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் பஜன் கவுர் ஏமாற்றம்

Published On 2024-08-03 09:14 GMT   |   Update On 2024-08-03 09:14 GMT
  • துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
  • வில்வித்தையில் மற்றொரு வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியா, இந்தோனேசியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் பஜன் கவுர் கலந்துகொண்டார்.

இதில் பஜன் கவுர் 5-5 என சமனிலை பெற்றார். இதனால் ஷூட் ஆப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பஜன் கவுர் தோல்வி அடைந்தார்.

மற்றொரு வீராங்கனையான தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News