கிரிக்கெட் (Cricket)
மகளிர் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டி: மும்பை அணிக்கு எதிராக டெல்லி பந்து வீச்சு தேர்வு
- இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
- டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் முடிவில் மும்பை, குஜராத், டெல்லி ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இதில் டெல்லி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்றில் குஜராத்தை வீழ்த்தி மும்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.