ஐ.பி.எல்.
2025 ஐ.பி.எல். தொடருக்கான கேப்டன்களின் போட்டோசூட் - புகைப்படங்கள் வைரல்
- ஐபிஎல் அணிகளின் 10 கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டது.
- 10 அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பைக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதியுடன் தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன.
இன்று மும்பையில் ஐபிஎல் அணிகளின் 10 கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டது.
இந்நிலையில், 10 அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பைக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். ஐபிஎல்-ன் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. .
ஐபிஎல் 17-வது சீசனின் தொடக்க விழா முன்னெப்போதும் இல்லாத வகையில் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.