கிரிக்கெட் (Cricket)

தெலுங்கானா DSP முகமது சிராஜ்க்கு ரிஷப் பண்ட் வாழ்த்து

Published On 2024-10-12 14:02 GMT   |   Update On 2024-10-12 14:02 GMT
  • முகமது சிராஜ்-க்கு க்ரூப் 1 அரசு பணி வழங்குவதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்து இருந்தார்.
  • தெலங்கானா மாநில காவல் துறை துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார்.

டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இந்திய வீரர் முகமது சிராஜ்-க்கு க்ரூப் 1 அரசு பணி, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் வழங்குவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், தெலங்கானா மாநில காவல் துறை துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

தெலங்கானா காவல்துறையில் DSP-யாக பொறுப்பேற்ற இந்திய வீரர் முகமது சிராஜ்க்கு ரிஷப் பண்ட் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News