கிரிக்கெட் (Cricket)

ஹர்திக் பாண்ட்யா - நடாஷா பிரிவிற்கு இதுதான் காரணமா? - வெளியான புதிய தகவல்

Published On 2024-08-25 06:30 GMT   |   Update On 2024-08-25 06:30 GMT
  • ஹர்திக் பாண்ட்யாவும் நடாஷாவும் பிரிந்து வாழ முடிவு எடுத்துள்ளனர்.
  • இருவரும் பிரிந்தற்கான காரணம் குறித்து டைம்ஸ் நவ் செய்தித்தாளில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

செர்பியா நாட்டைச் சேர்ந்த நடாஷாவை இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா கடந்த நான்கு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அண்மையில் ஹர்திக் பாண்ட்யாவும் நடாஷாவும் பிரிந்து வாழ முடிவு எடுத்தனர். இந்த தகவலை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

எதற்காக ஹர்திக் பாண்ட்யாவும் நடாஷாவும் பிரிந்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் பிரிந்தற்கான காரணம் குறித்து டைம்ஸ் நவ் செய்தித்தாளில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், "பிரபல மாடலான நடாஷாவின் வாழ்க்கை முறையும் கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்க்கை முறையும் வித்தியாசமானதாக இருந்துள்ளது. திருமணத்திற்கு பின்பு தான் பாண்ட்யாவும் நானும் வித்தியாசமான குணாதிசயம் கொண்டவர்கள் என்பதை நடாஷா உணர்ந்துள்ளார்.

பாண்ட்யா ஆடம்பரமாகவும் தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் நபராக இருந்தது நடாஷாவிற்கு பிடிக்கவில்லை. இந்த பிரச்சனை இருவருக்கும் இடையே இடைவெளியை உருவாக்கியுள்ளது. இந்த இடைவெளி காலப்போக்கில் பெரிதாகி பிரிந்து வாழும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News