விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் காலிறுதிக்கு முன்னேறினார் தீபிகா குமாரி

Published On 2024-08-03 08:58 GMT   |   Update On 2024-08-03 08:58 GMT
  • இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.
  • துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் நூலிழையில் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

பாரீஸ்:

பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் தீபிகா குமாரி கலந்துகொண்டார்.

இந்த சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ஜெர்மனி வீராங்கனையை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஏற்கனவே நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் நூலிழையில் 3-வது பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

Tags:    

Similar News