கால்பந்து

சர்வதேச கால்பந்தில் 50 கோல்கள்.. புதிய மைல்கல்லை எட்டிய பால தேவி

Published On 2024-10-19 15:56 GMT   |   Update On 2024-10-19 15:56 GMT
  • இந்தியாவுக்காக 50 கோல்களை அடித்ததில் பெருமைப்படுகிறேன்.
  • இந்த சாதனையை என அப்பாவிற்கு அர்ப்பணிக்கிறேன்.

சர்வதேச கால்பந்தில் 50 கோல்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மணிப்பூரைச் சேர்ந்த இங்கோகம் பாலா தேவி பெற்றுள்ளார்.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

இந்த மைல்கல்லை எட்டியது குறித்து பேசிய பால தேவி, "இந்தியாவுக்காக 50 கோல்களை அடித்ததில் பெருமைப்படுகிறேன். இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். இந்த சாதனையை என் அப்பாவிற்கு அர்ப்பணிக்கிறேன். எனக்கு கால்பந்து விளையாட்டை சொல்லி கொடுத்தது என் அப்பா தான். நான் இன்று இங்கு இருப்பதற்கு காரணமும் என் அப்பா தான்" என்று தெரிவித்தார்.


Tags:    

Similar News