விளையாட்டு (Sports)

இதுதான் இந்தியாவுக்காக விளையாடிய கடைசி போட்டி: போபண்ணா

Published On 2024-07-29 15:44 GMT   |   Update On 2024-07-29 15:44 GMT
  • டேவிஸ் கோப்பையில் இருந்து ஏற்கனவே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
  • இரண்டு தசாப்தங்களாக நான் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நான் நினைக்கவே இல்லை.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சீனியர் டென்னிஸ் வீரரான ரோகன் போபண்ணா என்.ஸ்ரீராம் உடன் இணைந்து களமிறங்கினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே பிரான்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

இந்த நிலையில் இந்திய அணிக்கான எனது கடைசி போட்டியில் விளையாடினே எனத் தெரிவித்துள்ளார். 22 வருடமாக ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் விளையாடிய போபண்ணா ஏமாற்றத்துடன் விடைபெறுகிறார்.

1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயேஸ் வெண்கல பதக்கம் வென்றார். அதன்பின் டென்னிசில் யாரும் பதக்கம் வெல்லவில்லை. 2016-ம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா உடன் இணைந்து பதக்கம் வெல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.

இது இந்தியாவுக்கான எனது கடைசி போட்டியாக இருக்கப்போகிறது. நான் எங்கு இருக்கிறேன் என்பதை நான் முழுமையாக புரிந்துகொண்டேன். அது செல்லும் வரை டென்னிசை ரசிக்கப் போகிறேன் என போபண்ணா தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் 2026-ல் நடைபெறும் ஆசிய போட்டியில் பங்கேற்கமாட்டேன் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். டேவிஸ் கோப்பையில் இருந்து ஏற்கனவே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

நான் இருக்கும் இடத்திற்கு இது ஏற்கனவே ஒரு பெரிய போனஸ். இரண்டு தசாப்தங்களாக நான் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. 2002 முதல், நான் அறிமுகமாகி 22 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்.

Tags:    

Similar News