விளையாட்டு (Sports)

பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் ஏமாற்றம் அளித்த இந்திய ஜோடி

Published On 2024-08-02 14:47 GMT   |   Update On 2024-08-02 14:47 GMT
  • கலப்பு இரட்டையர் வில்வித்தையில் இந்திய ஜோடி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆடியது.
  • துப்பாக்கி சுடுதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மனு பாக்கர்.

பாரீஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

இன்று மதியம் நடந்த வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா-தீரஜ் ஜோடி 5-1 என்ற கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது. மாலையில் நடந்த வில்வித்தை காலிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி 5-3 என்ற கணக்கில் ஸ்பெயின் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

இதற்கிடையே, இரவில் நடந்த அரையிறுதியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா-அங்கிதா பகத் ஜோடி, தென் கொரியாவின் ஷியோன் லிம்-வூஜின் கிம் இணையுடன் மோதியது. இதில் தென் கொரிய ஜோடி 6-2 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், அரையிறுதியில் தோல்வி அடைந்த அங்கிதா-தீரஜ் ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அமெரிக்க ஜோடியுடன் விளையாடியது.

இதில் அமெரிக்க ஜோடியிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய ஜோடி.

Tags:    

Similar News