விளையாட்டு (Sports)

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய ஜோடி ஏமாற்றம்

Published On 2024-10-16 22:40 GMT   |   Update On 2024-10-16 22:40 GMT
  • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
  • இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

கோபன்ஹெகன்:

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடி, மலேசியாவின் பேர்லி டான் மற்றும் முரளிதரன் தினா ஜோடியுடம் மோதியது.

இதில் இந்திய ஜோடி 21-19, 17-21, 15-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி ஜோடி, கனடாவின் கெவின் லீ மற்றும் எலியானா ஜாங் ஜோடியுடன் மோதியது.

இதில் இந்திய ஜோடி 22-20, 19-21, 22-24 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

Tags:    

Similar News