விளையாட்டு

ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் வீரர்களுக்கு விண்ட்சர் கார் பரிசு: பிரபல தொழிலதிபர் அறிவிப்பு

Published On 2024-08-03 10:17 GMT   |   Update On 2024-08-03 10:20 GMT
  • ஒலிம்பிக்கில் இந்திய அணி இதுவரை 3 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
  • ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்தியர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றார்.

புதுடெல்லி:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்திய அணி இதுவரை 3 வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது. மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே ஆகியோர் தனிநபர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் வெண்கலம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் பிரபல ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது சிறந்த வீரர்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வெற்றிக்காக சிறப்பானதை பெறுவதற்கு தகுதியானவர்கள் என பதிவிட்டுள்ளார்.

சஜ்ஜன் ஜிண்டாலின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டாலின் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து மோரிஸ் காரேஜஸ் இண்டியா என்ற நிறுவனம், எம்ஜிவிண்ட்சர் என்ற சொகுசு காரை தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News