விளையாட்டு (Sports)

பாரீஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிசில் ஏமாற்றம் அளித்த மனிகா பத்ரா

Published On 2024-07-31 16:03 GMT   |   Update On 2024-07-31 16:03 GMT
  • பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார்.
  • குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார். குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மனிகா பத்ரா, ஜப்பான் வீராங்கனை மியூ ஹிரானோ உடன் மோதினார். இதில் பத்ரா 1-4 என்ற புள்ளிக் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

மியூ ஹிரானோ ஒலிம்பிக் மற்றும் பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News