விளையாட்டு (Sports)

கோப்பு படம்


null

கல்லூரியிலேயே பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் - நடராஜன்

Published On 2024-07-09 06:01 GMT   |   Update On 2024-07-09 10:02 GMT
  • மாணவர்களான நீங்கள் ஒரு இலக்கை நோக்கி போகும் போது அதை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.
  • கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் நடராஜன் மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் 2020 ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார்.

ஐபிஎல் போட்டியில் தற்போது ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சேலத்தில் தான் படித்த கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் நடராஜன் மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

அப்போது பேசிய நடராஜன், மாணவர்களான நீங்கள் ஒரு இலக்கை நோக்கி போகும் போது அதை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். அப்பொழுது தான் அந்த இலக்கை உங்களால் அடைய முடியும்.

பஞ்சாப் அணிக்கு முதன் முதலில் நான் செல்லும்போது இந்தி தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். அங்கு தனிமையை உணர்ந்தேன். எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அங்கு இருந்த ஸ்ரீதர் என்ற பயிற்சியாளருக்கு தமிழ் தெரிந்ததால் அவர் தமிழில் பேசி எனக்கு உதவினார். அப்போது விரேந்தர சேவாக்கும் எனக்கு துணையாக இருந்தார்.

இந்தி தெரியவில்லை என்பதால் நான் சோர்ந்து போகவில்லை. எனவே நீங்கள் கல்லூரியிலேயே பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். கல்லூரியில் நீங்கள் பேசத் தொடங்கினால், நாளை உங்களால் எங்கு வேண்டுமானாலும் தில்லாக பேச முடியும் என்று நடராஜன் தெரிவித்தார்.

Tags:    

Similar News