விளையாட்டு
null

பாரீஸ் ஒலிம்பிக் ஷூட்டிங்: நூலிழையில் பதக்க சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார் சரப்ஜோத் சிங்

Published On 2024-07-27 10:16 GMT   |   Update On 2024-07-27 10:22 GMT
  • சரப்ஜோத் சிங் மற்றும் ஜெர்மனி வீரர் ஆகியோர் தலா 577 புள்ளிகள் பெற்றிருந்தனர்.
  • சரப்ஜோத் சிங் 16x, ஜெர்மனி வீரர் 17x பெற்றிருந்ததால் வாய்ப்பை இழந்தார்.

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் தகுதிச் சுற்று இன்று மதியம் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம் 33 வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஆறு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் 10 முறை இலக்கை நோக்கி சுட வேண்டும். மொத்த புள்ளிகள் கணக்கிடப்பட்டு முதல் 8 இடங்கள் பிடிக்கும் வீரர்கள் பதக்கத்திற்கான சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

இந்திய வீரரான சரப்போஜத் சிங் தொடக்கம் மற்றும் ஐந்தாவது சுற்றில் சிறப்பாக செயல்படவில்லை. முதல் சுற்றில் 94 புள்ளிகளும், 5-வது சுற்றில் 93 புள்ளிகளும் பெற்றார். 4-வது சுற்றில் 100 புள்ளிகள் பெற்று அசத்தினார். மொத்தமாக 577 புள்ளிகள் பெற்றார். இதில் 16 முறை துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டார்.

அதேவேளையில் ஜெர்மனி வீரர் ராபின் வால்டர், துருக்கி வீரர் இஸ்மாயின் கெலேஸ் ஆகியோரும் 577 புள்ளிகள் பெற்றிருந்தனர்.

ஆனால் ஜெர்மனி வீரர் ராபின் வால்டர் 17 முறை துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டார். சரப்ஜோத் சிங் 16 முறைதான் துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டதால் 9-வது இடம் பிடித்து பதக்கப்போட்டிக்கான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நூழிலையில் இழந்தார்.

மற்றொரு வீரர் அர்ஜுன் சிங் சீமா 574 (17 முறை 10) புள்ளிகள் பெற்றி 18-வது இடத்துடன் ஏமாற்றம் அடைந்தார்.

Tags:    

Similar News