விளையாட்டு (Sports)

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

Published On 2024-10-17 16:26 GMT   |   Update On 2024-10-17 16:26 GMT
  • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

கோபன்ஹெகன்:

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, சீன வீராங்கனையான ஹான் யூ உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 18-21 என இழந்த பி.வி.சிந்து, அடுத்த இரு செட்களை 21-12, 21-16 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதியில் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை சந்திக்கிறார்.

Tags:    

Similar News