விளையாட்டு (Sports)

ரோகித் சர்மாவை பார்த்து திடுக்கென எழுந்த ஸ்ரேயாஸ் அய்யர்

Published On 2024-08-22 16:50 GMT   |   Update On 2024-08-22 16:50 GMT
  • 26- வது சியாட் கிரிக்கெட் விருது வழங்கும் விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.
  • இவ்விழாவில் இந்திய பிரபல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.

26- வது சியாட் கிரிக்கெட் விருது வழங்கும் விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கினர்.

இவ்விழாவில் இந்திய பிரபல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் இருவருக்கும் இடையே நடந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விழாவில் கலந்து கொண்ட ரோகித் சர்மா அவரது இருக்கை தெரியாமல் கண்டுப்பிடிக்க தடுமாற்றமான மனநிலையில் இருந்த போது அதை கவனித்த ஸ்ரேயஸ் அய்யர் அவரது இருக்கையில் இருந்து எழுந்து ரோகித் சர்மாவை தன் இருக்கையில் அமருமாறு மரியாதையுடன் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News