கிரிக்கெட் (Cricket)

2வது போட்டியிலும் வெற்றி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

Published On 2024-10-23 19:06 GMT   |   Update On 2024-10-23 19:08 GMT
  • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், தீக்ஷனா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

கொழும்பு:

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக 44 ஓவராக குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரூதர்போர்டு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 80 ரன்கள் எடுத்தார். குடகேஷ் மோட்டி 50 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், தீக்ஷனா, அசிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா மற்றும் சதீரா சமரவிகரமா தலா 38 ரன்கள் எடுத்தனர்.

கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், இலங்கை 38.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.

ஆட்ட நாயகன் விருது மகேஷ் தீக்ஷனாவுக்கு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News