டென்னிஸ்

செங்டு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாம்ப்ரி ஜோடி

Published On 2024-09-24 01:49 GMT   |   Update On 2024-09-24 01:49 GMT
  • செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
  • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பீஜிங்:

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன.

இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரப்லேல் மாடோஸ்-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது.

இதில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 6-3, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாம்ரி ஜோடி, பிரான்சின் சாடியோ டொம்பியா-பேபியன் ரிபோல் ஜோடியை எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News