டென்னிஸ்

அமெரிக்க ஓபன்: இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி

Published On 2024-08-31 08:47 GMT   |   Update On 2024-08-31 08:47 GMT
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
  • இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

நியூயார்க்:

நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, ஸ்பெயினின் ராபர்ட் கார்பெலஸ்-அர்ஜென்டினாவின் பெடரிகோ கோரியா ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

இதேபோல் கலப்பு இரட்டைய பிரிவி இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, நெதர்லாந்தின் டெமி சர்ஸ்-ஜெர்மன் வீரர் டிம் புட்ஸ் ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 7-6 (9-7), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News