டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய மெத்வதேவ், சிட்சிபாஸ்

Published On 2024-10-08 09:05 GMT   |   Update On 2024-10-08 09:05 GMT
  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் நம்பர் 5 வீரரான மெத்வதேவ் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

பீஜிங்:

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் அலெக்சாண்டர் முல்லர் உடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் நம்பர் 5 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டு உடன் மோதினார்.

இதில் மெத்வதேவ் 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News