விளையாட்டு

ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் நிராகரிப்பு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறாரா வினேஷ் போகத்?

Published On 2024-09-14 14:33 GMT   |   Update On 2024-09-14 14:33 GMT
  • நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்
  • இந்திய ஒலிம்பிக் சங்கம் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் வினேஷ் போகத் குற்றம் சாட்டினார்

பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் மல்யுத்தத்தில் [50 கிலோ எடைப்பிரிவில்] இறுதிப்போட்டி வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்று பெருமையைப் பெற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக உள்ளதாக கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அவரது மனு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையே மல்யுத்தத்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்து அரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் மறுக்கத்தை மறுத்த நடுவர் நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்று அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் வினேஷிடம் மேல்யுமறையீடு செய்யலாம் என்று கூறியதாகவும், அதற்கு இந்த விவகாரத்தை மேற்கொண்டு அவர் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும், தனது தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் சங்கத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மெத்தனமாகச் செய்யப்பட்டதாகவும் வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News