விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பன்சோத்

Published On 2024-09-19 16:34 GMT   |   Update On 2024-09-19 16:34 GMT
  • சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் இந்திய வீராங்கனை பன்சோத் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

பீஜிங்:

சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோரை எதிர்கொண்டார்.

இதில் பன்சோத் 21-17, 19-21, 21-16 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதியில் பன்சோத், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் மோதுகிறார்.

Tags:    

Similar News