தமிழ்நாடு

10 வயது சிறுமிக்கு அரிவாள் வெட்டு- ஐ.டி ஊழியரால் பரபரப்பு

Published On 2024-07-27 14:09 GMT   |   Update On 2024-07-27 14:09 GMT
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
  • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்திநாயக்கன் பாளையம் பால் சொசைட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு என்பவரது 10 வயது கஷ்மிதா என்ற பெண் குழந்தையை கத்தியால் வெட்டியுள்ளார்.

குழந்தையின் சத்தம் கேட்டு செந்தில் குமாரின் தாய் சம்பூர்ணம் ஓடி வந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்த தங்கராசு, முத்துவேலு ஆகியோர் செந்தில் குமாரை பிடிக்க ஓடி வந்தனர். அவர்கள் இருவரையும் செந்தில் குமார் கத்தியால் தாக்கினார்

இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த தங்கராசு, முத்துவேல் இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் செந்தில் குமார் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் உடல் நிலை தேரிவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பைக் சம்பந்தமாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் அறையிலேயே யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 பெண் குழந்தைகளில் ஷோபாவில் அமர்ந்திருந்த கஷ்மிதாவை லேப்டாப் வைத்திருந்த மேஜைக்கு அடியில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தி வெட்டியுள்ளார் என்று விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News