தமிழ்நாடு

தருமபுரியில் 14 தாசில்தார்கள் பணியிட மாற்றம்- கலெக்டர் சாந்தி உத்தரவு

Published On 2024-07-16 04:21 GMT   |   Update On 2024-07-16 04:21 GMT
  • தருமபுரி சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார் பணியிட மாற்றம்.
  • காரிமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம் பணியிட மாற்றம்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாராக பணியாற்றி வந்த சரவணன், தருமபுரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், தருமபுரியில் தாசில்தார் ஜெய செல்வன் பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சண்முக சுந்தரம் தருமபுரி தாசில்தாராகவும், தருமபுரி சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார், நல்லம்பள்ளி தாசில்தாராகவும், தருமபுரி ஆலய நிலங்கள் தனி தாசில்தார் லட்சுமி பென்னாகரம் தாசில்தாராகவும்,

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணியாற்றி வந்த ரஜினி பாலக்கோடு தாசில்தாராகவும், காரிமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோவிந்தராஜ் காரிமங்கலம் தாசில்தாராகவும், தருமபுரி ஆதிதிராவிட நல தனி தாசில்தாராக வள்ளி பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாராகவும், நல்லம்பள்ளி தாசில்தார் பார்வதி, தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் தனி தாசில்தராகவும், பென்னாகரம் தாசில்தார் சுகுமார் , காரிமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம்,

பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ் தருமபுரி ஆதிதிராவிட நல தனித் தாசில்தாராகவும், பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மில்லர் , தருமபுரி தனி தாசில்தாராகவும் அங்கு பணியாற்றி வந்த பிரசன்ன மூர்த்தி, தருமபுரி ஆலய நிலங்கள் தனி தாசில்தாராகவும் பணியிடமாற்றம்செய்து இவர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News