செய்திகள்

திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் - போலீசார் விசாரணை

Published On 2018-05-19 04:50 GMT   |   Update On 2018-05-19 04:50 GMT
திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:

திருப்பூர் சோளிபாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 30). இந்து முன்னணி திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர் லோட்டஸ் கார்டன் பகுதியில் உள்ள நிரஞ்சன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவரது முகவரிக்கு சென்னையில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதை பிரித்து படித்தபோது அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த கடிதத்தில் ‘இறை இல்ல பிரச்சினையில் உன் செயல்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் இருந்து நீ விலகவில்லை எனில் கோவை சசிகுமார் மரணத்தை விட அகோரமாக உன் மரணம் அமையும்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து ராஜா 15.வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் சென்னை மடிப்பாக்கம் தபால் நிலையத்தில் இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News