தமிழ்நாடு

2019ம் ஆண்டு நீட்தேர்வு முறைகேடு: சிபிசிஐடி போலீசார் முறையாக கையாளவில்லை- நீதிபதி புகழேந்தி

Published On 2024-07-16 11:10 GMT   |   Update On 2024-07-16 11:10 GMT
  • இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.
  • போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வியையும் எடுத்து வைத்தார்.

நீட்தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் முறையாக கையாளவில்லை என்று அதனால் விசாரணை அதிகாரியை மாற்றுங்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி காட்டமாக கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

இந்த வழக்கின் பின்னணியானது கடந்த 2019ஆம் நடைபெற்ற நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் பலர் சேந்திருக்கிறார்கள். தேனி அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த சென்னை மாணவர் உதிப் சூர்யா என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்த போது பெரும் அதிர்ச்சி வெளியானது. 2019 ஆண்டு தேர்வில் உத்தர பிரதேசம், டெல்லி, கல்கத்தா, ராஜஸ்தான் போன்ற இடங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுந்திய சம்பவங்கள் நடைபெற்றது. இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது மாநில அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம் செய்தி ஊடகங்கள், பத்திரிக்கைகள் கண்ணபிண்ண என செய்திகளை வெளியிடுகிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அதற்கான ஆதாரங்களை காண்பித்தார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதி செய்தி ஊடகங்கள் சரியாகத்தான் செய்திகளை வெளியிடுகிறது என்று கூறினார். மாணவர்களின் அனைத்து அணிகலன்களையும் கழற்றி சோதனை செய்யும் நீங்கள், போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வியையும் எடுத்து வைத்தார்.

அதுபோக நீட்தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் முறையாக கையாளவில்லை விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்றுங்கள் என நீதிபதி அறிவுறுத்தி இருக்கிறார்.

மேலும் சிபிசிஐடி கேட்கும் வழக்கு குறித்த ஆவணங்களை தேசிய தேர்வு முகமை 19ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையானது உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News