தமிழ்நாடு

கடலூரில் பயங்கரம்- வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கடித்து கொன்ற தெரு நாய்

Published On 2024-06-27 16:02 GMT   |   Update On 2024-06-27 16:02 GMT
  • படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு.
  • உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை.

கடலூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து கொன்றுள்ளது.

குழந்தையின் தாய் வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்து குழந்தையை நாய் கடித்து குதறியுள்ளது.

இதையடுத்து, படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நாய் கடித்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News